பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
மும்பையைச் சேர்ந்தவரான சதா, ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். அந்த படத்தில் பக்கா குடும்ப குத்து விளக்காக நடித்தவர், பின்னர் நடித்த அந்நியன் உள்ளிட்ட படங்களில் குத்து நடிகைகள் ரேஞ்சுக்கு துகிலுரிந்து நின்றார். என்றாலும் அடுத்தடுத்து நடித்த படங்கள் வீழ்ந்து விட்டதால் சதாவின் மார்க்கெட்டும் வீழ்ந்தது. அதனால் மீண்டும் மும்பைக்கே திரும்பியவர், அங்கிருந்தபடியே சில இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு கல்லெறிந்து கொண்டிருந்தார். அதன்பயனாக இரண்டொரு படங்கள் கிடைத்தாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
அதனால் சதாவை அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், முஸ்லீமான அவரது அப்பா, முஸ்லீம் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மல்லுக்கு நிக்கிறாராம். ஆனால் இந்து மதத்தைச்சேர்ந்தவரான அவரது அம்மா, எனது இந்து மதத்தில் நான் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் சதா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வம்படியாக கோதாவில் குதித்திருக்கிறாராம். ஆக, இந்த கல்யாண கலவரத்தில் தேவையில்லாமல் சிக்கிக்கிடக்கும் சதா, அப்பா-அம்மா இருவரில் யார் பக்கம் சாய்வது என்பது புரியாமல் குழம்பிப்போயிருக்கிறார். இதையறிந்த அவரது நண்பர்கள் வட்டம், இந்துவை மணந்தால் அப்பா கோபிப்பார். முஸ்லீமை மணந்தால் அம்மா கோபிப்பார். அதனால் ஒரு கிறிஸ்தவ மாப்பிள்ளையை மணந்து கொள் என்று சதாவுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்களாம். இதையடுத்து இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு இதுதான் என்று தனக்கு பிடித்தமான கிறிஸ்தவ மாப்பிள்ளையை சீக்ரெட்டாக தேடிக்கொண்டிருக்கிறாராம் சதா.