10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |
நடிகை நமீதா தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. ஏய், சாணக்கியா, பம்பரக்கண்ணாலே, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் கவர்ச்சியான நாயகியாக நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வந்த நமீதா, ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவியுள்ளது.
முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை வலம் வந்த நமீதா பற்றிய இந்த செய்தியால் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த தகவலை நடிகை நமீதாவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். நமீதா இப்போது மும்பை ஆம்ப்வேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும், அங்கு அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். தற்கொலை வதந்தியைத் தொடர்ந்து நமீதா விரைவில் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்படியெல்லாம் கிளம்புறாங்கய்யா வதந்தியை...!