எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடிந்து முடிந்துள்ளது. முந்தைய சீசன்களை கம்பேர் செய்யும் போது பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓடிடி தளத்திற்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான உத்தேச போட்டியாளர்கள் பட்டியல் ஒருபுறம் வெளியாகி வர, முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்களை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் முதல் ஆளாக ஆர்மி வைத்திருந்த நடிகை சம்மதம் தெரிவித்துட்டாராம். அவருடன், பிரபல நடிகருடனும் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவரோ, 'எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, வாழ்க்கை நல்ல போயிட்டு இருக்கு. இனி நான் பிக்பாஸூக்கு சரி பட்டு வரமாட்டேன். ஆள விடுங்க' என எஸ்கேப் ஆகிவிட்டராம். ஓடிடியில் வெளியாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், ஜூலியானா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.