'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
'சிரிக்காதே... சிரிக்காதே... சிரிப்பாலே மயக்காதே... அடிக்காதே.. அடிக்காதே... அழகாலே அடிக்காதே...'என ரசிகர்கள் பாடும் அளவிற்கு அழகால் கவர்ந்து இழுக்கிறார் 'டாடா' பட நடிகையான சேலத்தை சேர்ந்த பவுசி.
'டிவி' தொடர்களில் நடித்து வரும் இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக கூறியதாவது: வீட்டில் நான் செல்லப்பொண்ணு. அப்பா தொழிலதிபர். சிறுவயதிலிருந்தே நடிகையாக ஆசை இருந்ததால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். என் ஆசை குறித்து பள்ளிப்பருவத்தில் இருக்கும் போதே குடும்பத்தில் சொல்லியிருந்தேன். அப்போது அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படிக்க சேர்ந்தேன். என் தோழி ஒருவரது உறவினர் பியூட்டி பார்லர் கடை திறப்பு விழாவை விளம்பரப்படுத்தும் விதமாக, மாடல் அழகிகளை வைத்து போட்டோ ஷூட் நடத்தி பேனர்களில் பதிவிட நினைத்தார். அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. ஆர்வமாக கலந்து கொண்டேன். அது என் சினிமா வாழ்வின் தொடக்கம். பின் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்கள் என்னை போட்டோ ஷூட் எடுக்க வருவார்கள். எனக்கும் விருப்பம் இருந்ததால் ஆர்வமாக
பங்கேற்றேன்.
இப்படியே வாழ்க்கை சென்றபோது சினிமாவில் காஸ்டியூமராக இருக்கும் தோழி ஒருவரது மூலமாக 'தட்றோம் துாக்றோம்' படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நல்ல முறையில் நடித்தேன். கொரோனா காலம் முடிந்தபின் படம் வெளியானது. அதை பார்த்து சீரியல் இயக்குநர் ஒருவர் 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தொடர்ச்சியாக 'கோகுலத்தில் சீதை', 'சிவா மனசுல சக்தி' உள்ளிட்ட 7 சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
என் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பித்தது. கவின் நடித்த 'டாடா'படத்தில் சாதனா கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்பின் 'இந்திரா' சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினேன். அதுவும் மக்களிடம் வரவேற்பை பெற்று தந்தது. சீரியலில் நடிக்கும் போது மூத்த நடிகை நளினியுடன் பழகிய நாட்களை என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாக கருதுகிறேன். நான் மனச்சோர்வாக இருக்கும் போது அவர் என்னை ஊக்கப்படுத்தி ஆதரவாக பேசி அரவணைத்து கொள்வார்.
பட வாய்ப்புகளுக்காக பல ஆடிஷன்களில் பங்கேற்றுள்ளேன். என் திறமையை வெளிக்காட்டியும் தேர்வாகாமல் புறக்கணிக்கப்பட்டதுண்டு. அதுபோன்ற நேரங்களில் வருத்தமாக இருக்கும். பிறகு என்னை நானே ஊக்கப்படுத்தி கொள்வேன். நம்முடைய கடமையை சரியாக செய்தால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதை தெரிந்து கொண்டேன்.
பலரும் வளர்ந்ததும் கடந்து வந்த பாதையை மறந்து விடுகின்றனர். அவ்வாறு இருக்க கூடாது. எந்தநிலை சென்றாலும் வந்த நிலை மறக்ககூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறேன். சினிமா வாய்ப்புகளும் வருகிறது. எனக்கான கதையை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும். இயற்கையாகவே கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக என் அழகிய சிரிப்பை நினைக்கிறேன் என்றார்.