Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

கடவுள் கொடுத்த பரிசு சிரிப்பு: பவுசி பளிச்

08 செப், 2024 - 04:02 IST
எழுத்தின் அளவு:
dinamalar-exclusive

'சிரிக்காதே... சிரிக்காதே... சிரிப்பாலே மயக்காதே... அடிக்காதே.. அடிக்காதே... அழகாலே அடிக்காதே...'என ரசிகர்கள் பாடும் அளவிற்கு அழகால் கவர்ந்து இழுக்கிறார் 'டாடா' பட நடிகையான சேலத்தை சேர்ந்த பவுசி.

'டிவி' தொடர்களில் நடித்து வரும் இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக கூறியதாவது: வீட்டில் நான் செல்லப்பொண்ணு. அப்பா தொழிலதிபர். சிறுவயதிலிருந்தே நடிகையாக ஆசை இருந்ததால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். என் ஆசை குறித்து பள்ளிப்பருவத்தில் இருக்கும் போதே குடும்பத்தில் சொல்லியிருந்தேன். அப்போது அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படிக்க சேர்ந்தேன். என் தோழி ஒருவரது உறவினர் பியூட்டி பார்லர் கடை திறப்பு விழாவை விளம்பரப்படுத்தும் விதமாக, மாடல் அழகிகளை வைத்து போட்டோ ஷூட் நடத்தி பேனர்களில் பதிவிட நினைத்தார். அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. ஆர்வமாக கலந்து கொண்டேன். அது என் சினிமா வாழ்வின் தொடக்கம். பின் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்கள் என்னை போட்டோ ஷூட் எடுக்க வருவார்கள். எனக்கும் விருப்பம் இருந்ததால் ஆர்வமாக
பங்கேற்றேன்.

இப்படியே வாழ்க்கை சென்றபோது சினிமாவில் காஸ்டியூமராக இருக்கும் தோழி ஒருவரது மூலமாக 'தட்றோம் துாக்றோம்' படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நல்ல முறையில் நடித்தேன். கொரோனா காலம் முடிந்தபின் படம் வெளியானது. அதை பார்த்து சீரியல் இயக்குநர் ஒருவர் 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தொடர்ச்சியாக 'கோகுலத்தில் சீதை', 'சிவா மனசுல சக்தி' உள்ளிட்ட 7 சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

என் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பித்தது. கவின் நடித்த 'டாடா'படத்தில் சாதனா கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்பின் 'இந்திரா' சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினேன். அதுவும் மக்களிடம் வரவேற்பை பெற்று தந்தது. சீரியலில் நடிக்கும் போது மூத்த நடிகை நளினியுடன் பழகிய நாட்களை என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாக கருதுகிறேன். நான் மனச்சோர்வாக இருக்கும் போது அவர் என்னை ஊக்கப்படுத்தி ஆதரவாக பேசி அரவணைத்து கொள்வார்.

பட வாய்ப்புகளுக்காக பல ஆடிஷன்களில் பங்கேற்றுள்ளேன். என் திறமையை வெளிக்காட்டியும் தேர்வாகாமல் புறக்கணிக்கப்பட்டதுண்டு. அதுபோன்ற நேரங்களில் வருத்தமாக இருக்கும். பிறகு என்னை நானே ஊக்கப்படுத்தி கொள்வேன். நம்முடைய கடமையை சரியாக செய்தால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதை தெரிந்து கொண்டேன்.

பலரும் வளர்ந்ததும் கடந்து வந்த பாதையை மறந்து விடுகின்றனர். அவ்வாறு இருக்க கூடாது. எந்தநிலை சென்றாலும் வந்த நிலை மறக்ககூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறேன். சினிமா வாய்ப்புகளும் வருகிறது. எனக்கான கதையை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும். இயற்கையாகவே கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக என் அழகிய சிரிப்பை நினைக்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றியின் வாசலை தேடும் விருதுநகர் அருள்ஜோதிவெற்றியின் வாசலை தேடும் விருதுநகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in