தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு | எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம் |

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகியுள்ள நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளாராக பணியாற்றிய ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் விரைவில் இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகிறது.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரிக்கை பிரிந்துவிட்ட கிரிஸில்டா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வந்தார். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், ரங்கராஜன் தன் முதல் மனைவி ஸ்ருதிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த காதலர் தினத்தன்று இதை உறுதி செய்யும் வகையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில் காதலர் தினத்தன்று வெளியிட்ட பதிவில், 'காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜனுடன் கொண்டாடினேன். அவர் எனக்கு பூ வாங்கி தந்தார்' என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரங்கராஜூடன் எடுத்துகொண்ட பல புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனால், இருவரது உறவும் உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.