விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு |

பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலிமினேட் ஆன ஹவுஸ்மேட்டுகள் உட்பட பல பிரபலங்கள் என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை புரொமோட் செய்து வருகின்றனர். இந்த வார எவிக்சனில் ஏடிகே வெளியேறியுள்ளார். இந்நிலையில், போட்டியின் இறுதிக்கட்டத்தில் நடக்கும் பணப்பெட்டி டாஸ்க்கானது அண்மையில் நடைபெற்றது. பைனலிஸ்ட் 6 பேரில் கதிர் மட்டும் பணம் மூட்டையை அறுக்க, மற்ற போட்டியாளர்கள் காத்திருக்கும்படி கேட்டனர்.
அப்போது கதிர் நான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என கூறி பணமூட்டையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். கதிர் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவால் சோகத்தில் ஆழ்ந்த ஷிவினிடம், போட்டிக்காக வாழ்த்து கூறி கை குலுக்க முயன்றார் கதிர். ஆனால், ஷிவின் கைகொடுக்க மறுத்து கைகூப்பி கதிருக்கு விடைகொடுத்தார். கதிர் சிரித்தப்படியே அங்கிருந்து சென்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதளங்களில் வைரலாக பலரும் ஷிவினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.