'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடைசி வாரம் வரை மிகவும் கடினமான போட்டியாளராக இருந்தார் ஜூலி. முந்தைய சீசனில் செய்த தவறை செய்யாமல், தான் இழந்த பெயரை மீண்டும் பெறுவதற்காக மக்களிடம் தன்னை நிரூபிப்பதற்காக விளையாடினார் ஜூலி. கடைசி வாரம் வரை வந்துவிட்டதால் கண்டிப்பாக இறுதிபோட்டியில் ஜூலி விளையாடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஜூலி இரண்டாவது எவிக்ஷனில் அபிராமிக்கு அடுத்தப்படியாக வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜூலி, சமூக வலைதளத்தில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'வெற்றி என்பது இறுதியில் நாம் எதை பெற்றோம் என்பது அல்ல. வெற்றிக்கான பயணத்தில் நாம் யாராக இருந்தோம் என்பதே முக்கியம்' என பதிவிட்டிருந்தார். ஜூலியின் இந்த பாசிட்டிவான ஆட்டிட்யூட் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜூலிக்கு ஆதரவாக பேசி வரும் பலரும் 'நீ மக்கள் மனதை வென்றுவிட்டாய். இது தான் உனது வெற்றி' என அவரை புகழ்ந்து வருகின்றனர்.




