‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
80, 90களின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கார்த்திக். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு அன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக இருந்தவர் கார்த்திக் தான். கார்த்திக் அவருடன் 'சோலைக்குயில்' படத்தில் கதாநாயகியாக நடித்த ராகினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கவுதம், காயின் என இரு மகன்கள் உள்ளனர்.
மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் கவுதம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது 'பத்து தல, ஆனந்தம் விளையாடும் வீடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் தன்னுடைய 32வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா ராகினி, தம்பி காயின் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் கவுதம்.
தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை கார்த்திக் அதிகமாக வெளியிட்டதில்லை. கவுதம் புகைப்படங்கள் கூட அவர் நடிகரான பிறகுதான் வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதம் தனது அம்மா, தம்பி ஆகியோரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.