‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது. அந்த விழாவில் 'சூரரைப் போற்று' படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் கிடைத்தது.
கொரானோ சூழல் காரணமாக விழா நிகழ்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. விருதுகள் வென்ற பிறகு வீடியோ மூலம் சூர்யாவும் நன்றி தெரிவித்துப் பேசினார். அந்த விருதுகள் சூர்யாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விருதுகளை சூர்யா, மனைவி ஜோதிகா, தயாரிப்பாளர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து பிரித்தார். அந்த வீடியோவை படத்தைத் தயாரித்த 2 டி நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டது.
இரண்டு விருதுகளை தனது கணவர் வென்றதற்கு ஜோதிகா மிகவும் மகிழ்ந்து தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார். ஓடிடியில் வெளியான படமாக இருந்தாலும் 'சூரரைப் போற்று' படம் ரசிகர்களைச் சென்றடைந்தது. படம் வெளியாகி ஒரு வருடம் ஆகப் போகிறது. இருந்தாலும் இன்னமும் ஓடிடியில் படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 'சூரரைப் போற்று' படப் பாடலான 'கையிலே ஆகாசம்' பாடல் தன்னைக் கண்ணீர் விட வைத்தாக பாராட்டி எழுதியிருந்தார்.




