சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் 'மாநாடு' படத்தின் சிங்கிள் கடந்த மாதம் ரம்ஜான் தினத்தில் வெளியிட்ட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைந்ததால் அதைத் தள்ளி வைத்தார்கள்.
அதன்பின் எப்போது சிங்கிள் வரும் என்று சிம்பு ரசிகர்களும் காத்திருந்தார்கள். கடந்த வாரம் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் டுவிட்டரில் லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது சிங்கிள் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, யுவன் தான் தாமதம் செய்கிறார் என்று ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றியது. அவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக சற்று முன் யுவன் டுவீட் செய்துள்ளார். அதில், “மாநாடு, சிங்கிள் விரைவில் வெளியாகும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
யுவன் டுவீட்டிற்கு 'ஹாட்டின்' எமோஜியைத் தயாரிப்பாளரும், யுவன் டுவீட்டை இயக்குனர் வெங்கட் பிரபுவும் ரிடுவீட் செய்துள்ளார்கள்.




