காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் 'மாநாடு' படத்தின் சிங்கிள் கடந்த மாதம் ரம்ஜான் தினத்தில் வெளியிட்ட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைந்ததால் அதைத் தள்ளி வைத்தார்கள்.
அதன்பின் எப்போது சிங்கிள் வரும் என்று சிம்பு ரசிகர்களும் காத்திருந்தார்கள். கடந்த வாரம் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் டுவிட்டரில் லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது சிங்கிள் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, யுவன் தான் தாமதம் செய்கிறார் என்று ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றியது. அவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக சற்று முன் யுவன் டுவீட் செய்துள்ளார். அதில், “மாநாடு, சிங்கிள் விரைவில் வெளியாகும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
யுவன் டுவீட்டிற்கு 'ஹாட்டின்' எமோஜியைத் தயாரிப்பாளரும், யுவன் டுவீட்டை இயக்குனர் வெங்கட் பிரபுவும் ரிடுவீட் செய்துள்ளார்கள்.