ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த ருத்ரமாதேவி என்கிற படம் வெளியானது. குணசேகர் இயக்கிய இந்தப்படத்தில் ராணா கதாநாயகனாக நடிக்க, அல்லு அர்ஜுன் கோன கண்ணா ரெட்டி என்கிற, சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் குணசேகர், சமந்தா நடிக்கும் சகுந்தலம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில் அல்லு அர்ஜுன் ருத்ரமாதேவியில் நடித்த கோன கண்ணா ரெட்டி என்கிற கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி, அதையே ஒரு படமாக குணசேகர் இயக்க உள்ளார் என்றும் அதில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும், ஒரு செய்தி கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என கூறியுள்ளார் குணசேகர்.
அதேசமயம், ருத்ரமாதேவி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு, ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டார் என்றும் இன்னொரு தகவல் கசிந்துள்ளது படத்திற்கு பிரதாப ருத்ரா என தலைப்பு வைக்கப்பட இருக்கிறதாம். காகதீய வம்சத்தின் கடைசி மன்னனான இந்த பிரதாப ருத்ரா, ராணி ருத்ரமாதேவியின் பேரன் ஆவாராம். இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.