பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் |

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானவர். தற்போது இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் 'ராமாயணா' ஹிந்தி படத்தில் 'சீதா' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'ஏக் தீன்' படத்தின் மூலம் சாய் பல்லவி அறிமுகமானார். இதில் இருந்த சிறப்பம்சம் என்னவென்றால் தனது கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவியே சொந்த குரலில் ஹிந்தியில் பேசினார். இதற்கு பல விமர்சனங்கள் ஹிந்தி சினிமா வட்டாரத்தில் உள்ளது. அவர் ஹிந்தி மொழி உச்சரிப்பு, வசனங்கள் ஒட்டவில்லை என்கிற கருத்து உள்ளது.
இந்த நிலையில் சாய் பல்லவி எந்த மொழியில் நடித்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் செய்ய வேண்டும் என விரும்புவர். அதேபோல் ராமாயணா படத்திற்கும் ஹிந்தியில் தன் கதாபாத்திரத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேச சாய் பல்லவி கேட்டுள்ளார். ஆனால், இதற்கு இயக்குனர் நிதேஷ் திவாரி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.