தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

கொரோனா இரண்டாவது அலையின் பரவல் மிகவும் மோசமாக இருக்கிறது. தினமும் சினிமா, டிவி பிரபலங்கள் யாராவது மரணம் அடைகிறார்கள் என்ற தகவலும் வந்து கொண்டுதான் இருக்கிறது. டிவி தொடர்களில், கேம் ஷோக்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் சில டிவிக்களின் தொடர்கள், ஷோக்கள் படப்பிடிப்புகள் ரகசியமாக நடந்து வருவதாகத் தெரிகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சில நடிகர்கள், நடிகைகள் அவர்களது பாதிப்பைப் பற்றி வெளியில் கூட சொல்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. தற்போது டிவி தொடர் ஒன்றில் நடிக்கும் ஒரு முன்னாள் கதாநாயகி நடிகை உள்ளிட்ட சிலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். அப்படி அவர்கள் சொன்னால் தான் அவர்களுடன் கடந்த சில நாட்களில் உடனிருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள இயலும்.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை படப்பிடிப்பு நடத்துபவர்கள் ஒழுங்காகக் கடைபிடிக்காததே டிவி நடிகர்கள், நடிகைகளுக்கு இந்த அளவிற்கு கொரோனா பரவக் காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருந்தால் அவர்களுக்கென தனி இட வசதி கொடுப்பார்கள். ஆனால், சிறிய நடிகர்கள், நடிகைகளுக்கு அப்படிப்பட்ட வசதிகள் கிடைக்காது. அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயால் அவர்களது நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கும்.
இப்படி ரகசியமாக படப்பிடிப்பு நடத்துபவர்களை அறிந்து அவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னத்திரை வட்டாரங்களில் இருந்தே தகவல் வருகிறது.