ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
கொரோன பெருந்தொற்றால் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். கொரோன தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் வேகத்தை குறைக்க ரெம்டெசிவிர் என்ற மருந்து போடப்படுகிறது. இதனால் இந்த மருந்தை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளில் திரள்கிறார்கள். தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் பல ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டரில் "எனது நண்பர் ஒருவரின் தந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. முடிந்தவர்கள் உதவுங்கள்" என்று கேட்டிருந்தார்.
ஐஸ்வர்யாவின் கோரிக்கையை ஏற்ற ரசிகர் ஒருவர் அவரது நண்பருக்கு ரெம்டெசிவர் மருந்து அனுப்பி உள்ளார். இதை குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் "ரெம்டெசிவிர் மருந்து கிடைத்து விட்டது. உதவிய உள்ளங்களுக்கு நன்றி" என்று டுவிட்டரில் கூறியிருக்கிறார்.