தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தமிழ் சினிமாவின் மூத்த குணசித்திர நடிகர் செல்லத்துரை நேற்று மாலை காலமானர்.
மதுரையை சேர்ந்த செல்லத்துரை, ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தவர், முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் ஒருவராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஜய்யின் தெறி, தனுஷின் மாரி, ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை, நயன்தாராவின் அறம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.




