வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். அதன்பின் 'ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் நடித்தார். குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நஸ்ரியா திடீரென மலையாள நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகினார்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தெலுங்கில் முதல் முறையாக நடிக்க உள்ளார். விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி கதாநாயகனாக நடிக்கும் 'அன்டே சுந்தரநிக்கி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இது பற்றி நஸ்ரியா, “எனது முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம். முதல் என்பது எப்பவுமே ஸ்பெஷல்தான். 'அன்டே சுந்தரநிக்கி'யும் ஸ்பெஷல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஐதராபாத்திற்கு தனது கணவர் பகத் பாசிலுடன் சென்றுள்ளார். அதனால், பகத்தும் தெலுங்கில் அறிமுகமாக உள்ள 'புஷ்பா' படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் மனைவி நஸ்ரியாவுக்குத் துணையாகத்தான் தற்போது சென்றுள்ளாராம். 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பு தற்போது இல்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




