இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என 'பாகுபலி' படம் வெளிவரும் வரை பெயரை வைத்திருந்தவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர். 'பாகுபலி' படம் வந்த இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதும் அந்த 'பிரம்மாண்ட இயக்குனர்' என்ற பெயர் இயக்குனர் ராஜமவுலிக்குப் போய்விட்டது.
தற்போது இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை நிறுத்திவிட்டு அடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கப் போகும் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் இயக்குனர் ஷங்கர்.
அந்தப் படம் 'முதல்வன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 1999ம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ரலா நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முதல்வன்'. அப்படத்தில் அர்ஜுன் 'ஒரு நாள் முதல்வர்' ஆக அதிரடி செய்திருப்பார்.
அந்த முதல்வர் கதாபாத்திரத்தில் தான் ராம் சரண் நடிக்கப் போகிறாராம். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படம் மூலம் ராம் சரண் தமிழில் அறிமுகமாகிறார் என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு, ஹிந்தியில் மட்டும் தான் நேரடியாக உருவாக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது. மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படலாம்.