பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

அமெரிக்காவில் இருந்து வந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பள்ளியில் படித்து வருகிறவர் அகிலா நாராயணன். அவர் நேற்று வெளியான காதம்பரி படத்தின் மூலம் நடிகை ஆகியிருக்கிறார். இசையில் ஆர்வம் இருந்தாலும் நடிப்பிலும் ஆர்வம் இருக்கிறது. இதனால் கல்லூரி நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இசையும், நடிப்பும் என் இரு கண்கள். இசை கற்றுக் கொண்டே நடிக்கவும் செய்கிறேன். தனி இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறேன். இசைக்கென்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கும் திட்டமும் இருக்கிறது. 4 வயதிலிருந்தே பாடி வருகிறேன். பல அழகிப் போட்டிகளில் டைட்டில் பெற்றிருக்கிறேன். இந்த இரண்டும் தான் என்னை இசை மீதும், நடிப்பின் மீதும் நம்பிக்கை கொள்ள வைத்தது. ரஹ்மான் சார் பள்ளியில் தற்போது மேற்கத்திய இசை பயிற்சி பெற்று வருகிறேன். 2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு இசை பயிற்சியும் அளித்து வருகிறேன். விளம்பர மாடலாகவும் பணியாற்றி வருகிறேன். இசை மற்றும் நடிப்பில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருக்கிறேன் என்கிறார் அகிலா.




