பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாகவே பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. விபிஎப் கட்டண விவகாரம், ஆன்லைன் முன்பதிவுக் கட்டண விவகாரம், பைரசி இணையதளங்கள் என பல்வேறு தீர்க்க முடியாத பிரச்சினகளால் சுழன்று கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வருட காலமாக கொரோனா தாக்கத்தால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாமல் தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து சினிமாவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முயற்சிக்காமல் தயாரிப்பாளர் சங்கங்கள் தற்போது மோதல் போக்கைக் கையில் எடுத்துள்ளன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்குக் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம். அதற்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதன் காரணமாக இரண்டு சங்கங்களும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
திரையுலகில் உள்ள மற்ற சங்கங்களில் முக்கிய சங்கமான நடிகர் சங்கமும் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் நடந்து முடிந்தும் வாக்கு எண்ணிக்கை நடக்காமல் இருக்கிறது. மற்றொரு சங்கமான தயாரிப்பாளர் சங்கத்திலும் எப்போதும் மோதல் போக்கே நிலவுகிறது. இந்த இரண்டு சங்கத்திலும் நடக்கும் விஷயங்களால் தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன.
ஆனால், மூத்த உறுப்பினர்களோ நமக்கு என்ன வந்தது என ஒதுங்கியே இருப்பதாக மற்றவர்கள் கவலைப்பட்டுக் கொள்கிறார்கள். எல்லா சங்கத்திலும் அரசியல் நுழைவதே அதற்கு முக்கியக் காரணம் என்கிறார் மூத்த சினிமா பிரமுகர் ஒருவர்.