பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிபலமான நடிகையாக உள்ளார் டாப்சி. கடந்த சில தினங்களாக இவர், இயக்குனர் அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட 30 பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார் டாப்சி.
அவர் பதிவிட்டாவது : ''கடந்த "3 நாட்களில் 3 விஷயங்களைத் தேடி தீவிரமான வருமான வரி சோதனை நடந்தது.
1. பாரீஸில் எனக்கு சொந்தமாக பங்களா உள்ளதாம். அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை வரப்போகிறது.
2. என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ப்ரேம் செய்து மாட்டி எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால், அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்தேன்.
3. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகள் என்னிடம் இருக்கின்றன.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.




