இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

போயபதி சீனு இயக்கத்தில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய தெலுங்குத் திரைப்படம் 'அகண்டா 2'. ஈராஸ் நிறுவனத்திற்கு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தர வேண்டிய பழைய கடன் தொகை பாக்கிக்காக சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. அதனால், படத்தை அறிவித்தபடி நேற்று வெளியிடமுடியவில்லை.
இந்நிலையில் படத்தைத் தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது. அது குறித்து அவர்களது எக்ஸ் தளத்தில், “நாங்கள் 'அகண்டா 2' படத்தை பெரிய திரைகளுக்குக் கொண்டு வர எங்கள் முழு முயற்சியையும் செய்தோம், ஆனால் எங்கள் அயராத முயற்சிகள் இருந்தபோதிலும், சில சமயங்களில், மிகவும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன, மற்றும் துரதிர்ஷ்டவசமாக, இது அந்த நேரமாக அமைந்தது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மற்றும் சினிமா பிரியர்களுக்கும், படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கும், நாங்கள் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம். இந்த சவாலான தருணத்தில் எங்களுடன் நின்ற எங்கள் அன்பான 'மக்களின் கடவுள்' பாலகிருஷ்ணா காரு மற்றும் போயபாடி சீனு காரு ஆகியோருக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அகண்டா 2, எப்போது வந்தாலும் இலக்கைத் தாக்கும்… புதிய தேதியுடன் விரைவில் வருகிறது” என்று அறிவித்துள்ளார்கள்.




