2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது 'முன்னாள் தலைவர் விஷால் மீது கூறப்பட்ட 8 கோடி ரூபாய் முறைகேடு பிரச்னை என்ன ஆனது' என்ற கேள்விக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமி அளித்த பதிலில் கூறியதாவது:
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது 8 கோடி வரை வைப்புநிதியில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டினார். அதை விசாரிப்பதற்காக அவர் தலைமையிலேயே கமிட்டி போடப்பட்டிருக்கிறது. விஷால் தலைமைக்கு பிறகு 2 ஆண்டுகள் சங்கம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அரசு சார்பிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அறிக்கையும் வந்திருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும். அது சம்பந்தமாகவும் கூடி பேசியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.