மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்த 1987ம் ஆண்டு வெளியான படம் 'நாயகன்'. இப்படத்தில் கமலுடன் சரண்யா, கார்த்திகா, ஜனகராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படம் தமிழகத்தில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி இந்த நாயகன் படத்தை நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் எஸ் .ஆர். பிலிம் பேக்டரி எஸ். ஆர் .ராஜன் என்பவர் நாயகன் படத்தின் ரீ ரிலீஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது வி. எஸ் .பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அப்படத்தை முறைகேடாக ரிலீஸ் செய்கிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நாயகன் படத்தை ஒப்பந்த அடிப்படையில் ரீரிலீஸ் செய்வதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார். அதனால் இப்படத்தின் ரிலீஸ்க்கு ஏற்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. அதோடு நீதிபதி செந்தில்குமார், நாயகன் படத்தை தான் 16 முறை பார்த்திருப்பதாகவும், காட்சி வாரியாக தன்னால் இந்த படத்தை மீண்டும் சொல்ல முடியும் என்றும் ஒரு கருத்து கூறியிருக்கிறார்.