சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீதான இமேஜ் சரிந்துள்ளது. அவர் தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியும் எதிர்பார்த்து வருகிறார்.
இதுவரையில் விஜய் பேசிய போதெல்லாம் 'திமுக என் அரசியல் எதிரி, பா.ஜ., என் கொள்கை எதிரி' என்றே பேசி வந்திருக்கிறார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இதனிடையே, ஆந்திர அரசியல் வட்டாரங்களில் ஜன சேனா கட்சித் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
தனது அண்ணன் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்த போது தேர்தலில் தனித்து நின்றதால்தான் கட்சி தோல்வியைத் தழுவியது. கூட்டணியில் நிற்கும் போதுதான் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது என தன் கட்சியைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரிகிறது.
தன்னை முதல்வர் வேட்பாளர் என்றே தனது கட்சித் தொண்டர்களிடம் பேசி வந்த விஜய், அதை விட்டுவிட்டு கூட்டணி சேர்ந்து, வேறொருவர் முதல்வர் ஆக ஆதரவு கொடுப்பாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.




