டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெய்வீகமும், தேசியமும் எனது இரு கண்கள் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் . தென்னிந்திய தலைவர்களில் ஒருவரான அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நண்பராகவும் திகழ்ந்தவர்.
அவர் காலத்தில் சினிமா இருந்தது. ஆனால் அவர் சினிமா பார்த்ததில்லை. சினிமா மக்களுக்கு அவசியமில்லாத ஒன்று, இதனால் அவர்களின் உழைப்பும், நேரமும் வீணாவதாக கருதினார். அப்படிப்பட்ட தேவர் பார்த்த ஒரே படம் 'ஔவையார்'.
சந்திரலேகாவைப் போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953ல் 'ஔவையார்' படத்தை வாசன் தயாரித்தார். ஔவையார் பாத்திரத்தில் பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியான கே.பி.சுந்தராம்பாள் நடித்தார். தன் வாழ்க்கையில் சினிமாவே பார்த்திராத தேவரை பார்க்க வைத்த படம் ஔவையார். சிவகங்கையிலுள்ள ஶ்ரீராம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். படம் அவருக்கு பிடித்துப்போனதால் இரண்டாவது முறையும் இந்தத் தியேட்டருக்கு வந்து 'ஔவையார்' படத்தை தேவர் ரசித்துப் பார்த்தார். தனது படத்தை 2 முறை பார்த்ததற்காக தேவருக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்தார் வாசன்.