தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

71ம் ஆண்டுக்கான சினிமா தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'பார்க்கிங்' படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது. 'வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், பலரும் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படத்துக்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குனர் மந்திரமூர்த்தி, ''அயோத்திக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி, அதேசமயம் பார்க்கிங் தரமான படம், விருதுக்கு உரிய படம். அதற்காக விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்'' என கூறியுள்ளார். அயோத்தி படம் விருது பட்டியலில் இருந்தது. ஆனால், அடுத்த கட்ட தேர்வுகளில் அது நகரவில்லை. அதனால் விருது கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே விருது ஜூரியாக இருந்தார். டில்லியிலும் மற்ற மொழி ஜூரி ஆதிக்கம். அதனால், இந்தமுறை 4 விருது கிடைத்ததே பெரிய விஷயம். குறிப்பாக, எம்.எஸ்.பாஸ்கருக்கு போராடிதான் சிறந்த துணை நடிகர் விருது வாங்கியுள்ளனர் என தகவல் வருகிறது.




