'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

அரசியல் நையாண்டி மற்றும் நக்கல் காமெடி நடிப்பால் புகழ்பெற்றவர் எஸ்.எஸ்.சந்திரன். அதிபர் ஜோசப் தளியத் 'காதல் படுத்தும் பாடு' என்ற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். காமெடி, குணசித்திர வேடங்களிலும், வில்லன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் “மாப்பிள்ளை”, “உழைப்பாளி” படங்களில் நடித்துள்ளார். “பாட்டி சொல்லை தட்டாதே” படத்தில் எஸ்.எஸ்.சந்திரன் பாத்திரம் பேசப்பட்டது.
பூக்காரி, சிவப்பு மல்லி, அவன், சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, தைப்பூசம்,, உழவன் மகன், என்னை விட்டுப் போகாதே, பொங்கி வரும் காவேரி, ஆத்தா உன் கோயிலிலே , சின்னப்பதாஸ், வண்டிச்சோலை சின்னராசு, கதாநாயகன் , காக்கைச் சிறகினிலே, தங்கமான ராசா, நாடோடி பாட்டுக்காரன், தங்கைக்கோர் கீதம், உனக்காக எல்லாம் உனக்காக, உயிருள்ளவரை உஷா, காதல் ரோஜாவே ஒன்ஸ்மோர், புதிய மன்னர்கள், 'மனைவி ஒரு மந்திரி, வாங்க பார்டனர் வாங்க உள்ளிட்ட 800 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இயக்குனர் ராம நாராயணனின் ஆஸ்தான நடிகராக இருந்தார். அவரது எல்லா படங்களிலும் எஸ்.எஸ்.சந்திரன் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராகி சிவகங்கை ஸ்கிரீன் என்ற நிறுவனத்தை தொடங்கி ராம நாராயணன் இயக்கத்தில் எங்கள் குரல், புருஷன் எனக்கு அரசன் படங்களை தயாரித்தார். 'பொம்பள சிரிச்சா போச்சு' என்ற படத்தை எஸ்.எஸ்.சந்திரன் இயக்கியதாகவும் கூறப்படுவதுண்டு.




