'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

அயோத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தினர் இங்கு என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவான இந்த படம் பல திரைபிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதோடு, திரைக்கு வந்த மூன்றே வாரங்களில் 75 கோடி வசூலித்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் குறித்து சசிகுமார் கூறும்போது, ''இப்பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் எப்படி முதலில் கதை சொன்னாரோ, அதை அப்படியே படமாக்கி இருக்கிறார். அவர் சொன்னதை அப்படியே உள்வாங்கி நானும் நடித்தேன். அதனால்தான் இந்த படத்தின் மூலம் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருக்கிறார். அவர் நடித்த அந்த வேடம் இந்த படத்திற்கு உணர்வுப்பூர்வமான ஒரு பலத்தை கொடுத்தது'' என்கிறார் சசிகுமார்.




