காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தெலுங்குத் திரையுலகத்தின் டாப் ஸ்டார்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். 'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார்களில் ஒருவராகிவிட்டார். அவரது அடுத்த படத்தை தமிழ் இயக்குனரான அட்லி இயக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படத்தில் அல்லு அர்ஜுன் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரட்டையர்களாகப் பிறந்த சகோதரர்களாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளாராம். அதனால்தான் அவருக்கு படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது என்கிறார்கள். சினிமா உலகில் அறிமுகமான இந்த 22 ஆண்டுகளில் அவர் இரு வேடங்களில் நடித்ததே இல்லை. முதல் முறையாக அப்படி நடிக்க உள்ளார்.
அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக இப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாராக உள்ளது என்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் படம் பற்றிய ஏதோ ஒரு அப்டேட் அதிகாரப்பூர்வமாக வருவது உறுதி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.