என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
2025ம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பமானது போல உள்ளது. ஆனால், அதற்குள்ளாக இரண்டு மாதங்கள் முடியப் போகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 28ம் தேதி இரண்டு த்ரில்லர் படங்கள் போட்டியில் மோத உள்ளன.
பாடலாசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'அகத்தியா' படமும், அறிவழகன் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடித்துள்ள 'சப்தம்' படமும் வெளியாக உள்ளன. இரண்டு படங்களுமே த்ரில்லர் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இரண்டு படங்களிலும் ஒரு மர்ம மாளிகை முக்கிய களமாக இருக்கிறது என்பது டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது. யார் எந்த அளவுக்கு பயமுறுத்தப் போகிறார்களோ அந்த அளவிற்கு வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.
இந்தப் படங்கள் தவிர்த்து 'கூரன், கடைசி தோட்டா' ஆகிய படங்களும் அன்றைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.