வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் |
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த இரண்டாம் பாகத்தில் சூரியை விட விஜய் சேதுபதிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதில் அவரது மனைவியாக ஒரு சமூக போராளியாக நடித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் டைரக்ஷனில் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது.
இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, “கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அங்கே உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிட சென்றிருந்தபோது பழைய சோறு வைத்திருந்தார்கள். ஆர்வமாக சாப்பிடலாம் என நினைத்தபோது அங்கே சற்று தள்ளி தூரத்தில் மஞ்சு வாரியர் தன் குழுவினருடன் நின்று கொண்டிருந்தார். நாமாக போய் பேசலாமா, நம்மை அவருக்கு அடையாளம் தெரியுமா என்று தயக்கத்துடன் நான் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
ஆனால் சில நிமிடங்களில் அவரே என்னைப் பார்த்துவிட்டு நேரடியாக தேடி வந்து என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். அவர் என்னையெல்லாம் ஞாபகம் வைத்து இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டேன். அன்றுதான் முதன்முறையாக அறிமுகமானோம். ஆனால் அன்று இரவே துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அவரது கையால் நான் விருது பெற்றேன் என்பதும் இன்னொரு ஆச்சர்யம் தான். கிட்டத்தட்ட இது நடந்து ஏழு வருடம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.