தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

தமிழ் சினிமாவில் 'சேது' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. திரையுலகில் 25 வருடங்களைக் கடந்த அவருக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அத்துடன் அவர் இயக்கி பொங்கலுக்கு வெளியாக உள்ள 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் பாலாவின் இயக்கத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சிலரைத் தவிர பலர் விழாவுக்கு வருகை தரவில்லை. பாலா இயக்கிய முதல் படமான 'சேது' படத்தின் நாயகன் விக்ரம் வரவில்லை. இருந்தாலும் சூர்யா, அவரது அப்பா சிவகுமார் ஆகியோர் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். இத்தனைக்கும் இந்த 'வணங்கான்' படத்தில்தான் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
பாலாவின் இயக்கத்தில் நடித்த மற்ற நடிகர்களான விஷால், ஆர்யா, அதர்வா மற்றும் நடிகைகள் யாரும் வரவில்லை. ஒரு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே வந்தனர். பாலாவின் இயக்கத்தில் நடிக்காத சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.