இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

கன்னட சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்த மோகன், பாலுமகேந்திராவின் முதல் படமான 'கோகிலா'வில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். முதல் ஹீரோ கமல்ஹாசன். பிறகு 'மூடுபனி' படத்தின் மூலம் பாலுமகேந்திராவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதில் பிரதாப் ஹீரோ, மோகன் இரண்டாவது ஹீரோ. அதன் பிறகு மகேந்திரன் இயக்கிய 'நெஞ்சத்தை கிள்ளாதே'வில் மோகன்தான் கதையின் நாயகன். ஆனால் டைட்டில் கார்டில் பிரதாப், சரத்பாபுவுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் மோகன் பெயர் இடம் பெற்றது.
முதன் முறையாக முழு திரையில் மோகன் என தனித்து பெயர் வெளியிடப்பட்டது 'கிளிஞ்சல்கள்' படத்தில்தான். இதற்கு முன்பு மோகன் நடித்த படங்கள் வெற்றிப் படங்கள் என்றாலும் கிளிஞ்சல்கள்தான் முதல் வெள்ளி விழா படம். மோகன் ஜோடியாக பூர்ணிமா நடித்தார். இவர்களுடன் திலீப், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர். துரை இயக்கினார்.
இந்து இளைஞனுக்கும், கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையிலான காதலை பேசிய படம். 'காதலர்கள் தோற்கலாம். காதல் தோற்பதில்லை' என்ற படம். முதன் முதலாக டி.ராஜேந்தர் இசை அமைத்த வெளியான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. கிளிஞ்சல்கள் இப்போதும் காதலர்களின் பேவரேட் படமாக இருக்கிறது.




