அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கன்னட சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்த மோகன், பாலுமகேந்திராவின் முதல் படமான 'கோகிலா'வில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். முதல் ஹீரோ கமல்ஹாசன். பிறகு 'மூடுபனி' படத்தின் மூலம் பாலுமகேந்திராவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதில் பிரதாப் ஹீரோ, மோகன் இரண்டாவது ஹீரோ. அதன் பிறகு மகேந்திரன் இயக்கிய 'நெஞ்சத்தை கிள்ளாதே'வில் மோகன்தான் கதையின் நாயகன். ஆனால் டைட்டில் கார்டில் பிரதாப், சரத்பாபுவுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் மோகன் பெயர் இடம் பெற்றது.
முதன் முறையாக முழு திரையில் மோகன் என தனித்து பெயர் வெளியிடப்பட்டது 'கிளிஞ்சல்கள்' படத்தில்தான். இதற்கு முன்பு மோகன் நடித்த படங்கள் வெற்றிப் படங்கள் என்றாலும் கிளிஞ்சல்கள்தான் முதல் வெள்ளி விழா படம். மோகன் ஜோடியாக பூர்ணிமா நடித்தார். இவர்களுடன் திலீப், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர். துரை இயக்கினார்.
இந்து இளைஞனுக்கும், கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையிலான காதலை பேசிய படம். 'காதலர்கள் தோற்கலாம். காதல் தோற்பதில்லை' என்ற படம். முதன் முதலாக டி.ராஜேந்தர் இசை அமைத்த வெளியான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. கிளிஞ்சல்கள் இப்போதும் காதலர்களின் பேவரேட் படமாக இருக்கிறது.