கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தற்போது அஜித் குமார் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அஜித்தும் அரசியலுக்கு வருவாரா என்பது போன்ற கேள்விகள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அது குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா தான் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ''விஜய்யை பொருத்தவரை படப்பிடிப்பு தளங்களில் அமைதியாகவே இருப்பார். இதுவரை அவர் அரசியல் பேசி நான் பார்த்ததே இல்லை. ஆனாலும் இன்றைக்கு விஜய் அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இப்படி விஜய்யை போன்றுதான் அஜித்குமாரும் படப்பிடிப்பு தளங்களில் அரசியல் குறித்து பேசியதில்லை. யாராவது அரசியல் குறித்து பேச தொடங்கினால் கூட தான் அமைதியாகி விடுவார். அதோடு அவருக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் துளி கூட கிடையாது. அதனால் விஜய்யை போன்று அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை,'' என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.