ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படம் 'நேசிப்பாயா'. இதனை ஆகாஷ் மனைவி, சினேகாவின் தந்தை பிரிட்டோ தயாரிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்குகிறார், யுவன் இசை அமைக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் மூலம் முன்னணி பாலிவுட் நடிகையான கல்கி கோச்லின் தமிழுக்கு வருகிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது “நேசிப்பாயா தலைப்புக்கு ஏற்ற மாதிரியே காதல் கதை. 30 சதவிகித கதை சென்னையிலும், 70 சதவிகித கதை போர்ச்சுகல் நாட்டிலும் நடக்கிறது. படத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும். இந்த கேரக்டரை எழுதும்போதே கல்கி கோச்லினை மனதில் வைத்துதான் எழுதினேன். காரணம் அவர் தமிழை ஒரு ஸ்டைலாக பேசுவார், ஆங்கில அறிவும் இருக்கிறது.
ஆனால் அவரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அவர் நயன்தாராவுக்கு நல்ல தோழி, இதனால் அவர் மூலம் தொடர்பு கொண்டு கதை சொன்னேன். பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் கேரக்டர்தான் படத்தின் திருப்பமாக இருக்கும். இந்த படத்திற்கு பிறகு அவரை இனி அடிக்கடி தமிழ் படங்களில் பார்க்கலாம்” என்றார்.