கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் தமிழில் வாத்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கிறார். மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. இதைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பல திரைப்பிரபலங்களும் பேசி வருகின்றனர். இதில் சில முன்னணி நடிகர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
ஹேமா கமிட்டி போன்று மற்ற திரையுலகிலும் இதுபோன்று கமிட்டி அமைக்க வேண்டும் என்ற குரல்கள் எழ துவங்கி உள்ளன. இந்நிலையில் ஹேமா கமிட்டி பற்றி சம்யுக்தா கூறுகையில், ‛‛காட்டில் மாட்டிக் கொண்டு வழிதேடும் விதமாக தான் இன்றைய சினிமா உள்ளது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சிலர் சுரண்டல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அதற்கு ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் ஒரு கேம் சேஞ்சராக மாறும்'' என்கிறார்.