சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

மலையாள திரை உலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும் பெண்கள் பாலியல் ரீதியாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் அது குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அதில் ஈடுபட்ட சில நடிகர்கள், இயக்குனர்கள் குறித்தும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். அந்த வகையில் நடிகர்கள் சித்திக், முகேஷ் ஜெயசூர்யா ஆகியவர் தான் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மீடியாக்களில் பெரிய அளவில் அடிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து மலையாள திரையுலகின் சீனியர் நடிகையான ஷீலா கூறும்போது, “பெண்கள் படங்களில் நடிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டங்கள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். நான் அதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்றாலும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் அவையெல்லாம் குறித்து பேசுவதற்கான வாய்ப்போ, அதற்கான சரியான சூழலோ யாருக்கும் அமையவில்லை. அதேசமயம் ஏன் சில நடிகர்களின் பெயர்கள் மட்டும் இந்த பிரச்சனையில் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது என்பதை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தவறு யார் செய்திருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.