ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மலையாள திரை உலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும் பெண்கள் பாலியல் ரீதியாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் அது குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அதில் ஈடுபட்ட சில நடிகர்கள், இயக்குனர்கள் குறித்தும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். அந்த வகையில் நடிகர்கள் சித்திக், முகேஷ் ஜெயசூர்யா ஆகியவர் தான் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மீடியாக்களில் பெரிய அளவில் அடிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து மலையாள திரையுலகின் சீனியர் நடிகையான ஷீலா கூறும்போது, “பெண்கள் படங்களில் நடிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டங்கள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். நான் அதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்றாலும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் அவையெல்லாம் குறித்து பேசுவதற்கான வாய்ப்போ, அதற்கான சரியான சூழலோ யாருக்கும் அமையவில்லை. அதேசமயம் ஏன் சில நடிகர்களின் பெயர்கள் மட்டும் இந்த பிரச்சனையில் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது என்பதை தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தவறு யார் செய்திருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.




