பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் | ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது | 'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர் | அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார் | ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம் | 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன் | சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் | வெளி மாநிலங்களில் 70 கோடி வசூலித்த 'கருப்பு' | ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...! |

தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் அஜித் குமார், அடுத்தபடியாக கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக கடந்த சில தினங்களாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛அஜித் - பிரசாந்த் நீல் இருவரும் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அந்த சந்திப்பின்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை' என்று தெரிவித்திருக்கிறார். இருப்பினும் ‛எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை' என கூறியிருக்கிறார். இதன் மூலம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.




