ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்பா. 1993ல் பிரபு கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'உழவன்' படத்தில் அறிமுகமானவர். அதற்கடுத்து சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடித்து வந்த 'உள்ளத்தை அள்ளித்தா' படம் அவரே மிகவும் பிரபலமாக்கியது. அந்தப் படத்தில் இடம் பெற்ற 'அழகிய லைலா' பாடல் அதற்குக் காரணம். சமீபத்தில் வெளிவந்த மலையாளப் படமான 'குருவாயூர் அம்பலநடையில்' அந்தப் பாடலைப் பயன்படுத்தி இருப்பார்கள்.
விஜய் ஜோடியாக 'நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா' ஆகிய படங்களில் நடித்தவர் ரம்பா. கனடாவைச் சேர்ந்த ஈழத் தமிழர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள்.
அதன்பின் சில டிவி ஷோக்களில் நடுவர் ஆகப் பணியாற்றினார் ரம்பா. அடிக்கடி சென்னை வந்து செல்வார். தற்போது சென்னை வந்துள்ளவர் தனது கணவர், குழந்தைகளுடன் விஜய்யை சந்தித்துள்ளார்.
“பல வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.