Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி

24 ஏப், 2024 - 03:26 IST
எழுத்தின் அளவு:
What-happens-if-the-lyricist-also-claims---judges-question-for-Ilayarajas-side

சென்னை : பாடல்கள் உரிமம் தொடர்பாக பாடலாசிரியர்களும் உரிமம் கோரினால் என்னவாகும் என இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை விதித்தனர். படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதால் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், ‛இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் சம்பளம் வழங்கிவிட்டார். அதன்படி அதன் உரிமை தயாரிப்பாளருக்கு சென்றுவிடும் அதன் அடிப்படையில் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டது' என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், ‛இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் சம்பந்தப்பட்டது. இதற்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‛அப்படி என்றால் ஒரு பாடல் என்பது பாடலாசிரியரின் பாடல் வரிகள் மற்றும் பாடகர்கள் சேர்ந்து தான் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல்கள் இல்லை. பாடலாசிரியர்களும் உரிமை கோரினால் என்னவாகும்' என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கின் விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ... அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Indhuindian - Chennai,இந்தியா
26 ஏப், 2024 - 10:04 Report Abuse
Indhuindian இது ஒன்னும் புதிது அல்ல. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே லதா மங்கேஸ்கர் அவர் பாடும் பாடலுக்கு காப்புரிமை கோரினார். அவருடன் சேர்ந்து டூயட் பாடிய மொஹமட் ராபிய கூட்டு சேர சொன்னார். அனால் அவர் நான் பாடிவிட்டேன் பாட்டுக்கு கூலி கொடுத்துட்டாங்க. அப்புறம் நமக்கு என்ன காப்புரிமை என்று லதா மங்கேஸ்கர் சொன்னதை சீண்டவே இல்லை. கோபம் கொண்ட லதா அதற்கு பிறகு ராபியுடன் பாடவே இல்லே. அதே போல்தான் இதுவும் பாட்டு ஏஷுதுபவர், வயலின் வாசிப்பவர், ரெகார்ட் பண்ணுபவர் அங்கே கதவை திறந்து மூடுபவரால் இப்படி யார் எல்லாம் அங்கே இருந்தார்களோ அவங்கள்லாம் காப்புரிமை கோரா முடியுமா? பாட்டுக்கு மெட்டு போட்டாச்சு காசு வாங்கியாச்சு அம்புடுதேன் மீதியெல்லாம் அந்த பட தயாரிப்பாளரையே சேரும் பெரிய மனிதர். அதிசைய ஞானம் ஆனால் மிதமீறிய பணத்தாசை சிறிய மனசு
Rate this:
Swamimalai Siva - Thanjavur,இந்தியா
25 ஏப், 2024 - 08:04 Report Abuse
Swamimalai Siva பணம் வாங்கிக்கொண்டு இசையமைத்தால், அதன் உரிமை பணம் கொடுத்தவருக்கே சாரும். இவர் பின்னணி இசை / பாடலினால் படம் பிளாப் ஆனால், இவர் பணம் கொடுப்பாரா. இவரின் திறமையை பணத்திற்கு விற்றுவிட்டு, இப்போது பங்கு கேட்பது நியாயமா?
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
24 ஏப், 2024 - 09:04 Report Abuse
Senthoora ஒரு சிறந்த படைப்பாளி. தான் இசை அமைத்த பாடலுக்கு உரிமை கோருகிறா. அப்பதனம். ஆன்மிகவாதி, ஆனால் பணம் வேணும். அந்தப்பாடலை நடிகர் நல்லபடி நடிக்கணும், தயாரிப்பாளர் அதை வியாபாரம் பண்ணனும். பாடலாசிரியர் எழுதணும். இதில் இவருக்கு என்ன ராய்லட்டி. மகளே போய்விட்டா, யாருக்குவேனும் சொத்து.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in