நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா இந்தியன் 2? | தீபிகா படுகோனேவை பிரிகிறாரா ரன்வீர் சிங் : பாலிவுட்டில் பரபரப்பு | விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? | ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி | சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ் | பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் | முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல் | போலி கணக்கு துவங்கி ட்ரோல்களை சமாளித்த அனேகன் பட நாயகி | மனைவியுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் யேசுதாஸ் |
படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பஹத் பாசில். ஒரு பக்கம் வில்லத்தனம், இன்னொரு பக்கம் காமெடி என கலந்து கட்டி நடித்து வரும் பஹத் பாசில் சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் அவரது ரங்கா கதாபாத்திரத்திற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான 'ஆடுஜீவிதம்' படத்தில் பிரித்விராஜின் நடிப்பு குறித்து பஹத் பாசிலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “12 வருடங்களாக கதையுடன் அவர் பயணித்து வந்துள்ளார். ஆறு வருடங்களாக அந்த கதாபாத்திரத்தை மனதில் தாங்கி பயணித்துள்ளார். ஆனால் ஒரு கதாபாத்திரத்திற்காக இத்தனை வருடங்கள் எடுத்துக் கொள்கின்ற நபர் நான் இல்லை. அதிகபட்சம் ஒரு கதையுடன் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை மட்டுமே என்னால் பயணிக்க முடியும்” என்று கூறியுள்ளார் பஹத் பாசில்.