தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
தமிழில் சைத்தான், கன்னி ராசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகிறார். இவருக்கு அடுத்ததாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ செலவுகளுக்காக அருந்ததி நாயரின் குடும்பம் மிகப்பெரிய அளவில் சிரமப்படுவதாகவும் இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பண உதவி தேவைப்படுவதாகவும் மலையாள திரை உலகை சேர்ந்த ரம்யா ஜோசப் என்கிற நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுவரை திரையுலகத்தில் இருந்து யாரும் அருந்ததியின் மருத்துவ செலவிற்காக நிதி உதவி செய்யவில்லை என்பதுடன் ஒருவர் கூட அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கடந்த ஐந்து நாட்களாக விசாரிக்க கூட இல்லை என்று தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ரம்யா ஜோசப்.