வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக்லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இப்படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்த துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்னை காரணமாக வெளியேறி விட்டார். இதனால் அவர் நடிக்க இருந்த வேடத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சிம்புவிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‛செக்கச் சிவந்த வானம்' என்ற படத்தில் நடித்துள்ள சிம்பு, இந்த ‛தக்லைப்' படத்தில் இணைந்தால் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் அவர் இணையும் படம் இதுவாக இருக்கும். மேலும் சிம்பு நடிக்கும் 48வது படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.