தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 30 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் இந்த படத்தின் மூலம் ஏ.ஆர் ரஹ்மான் மறுபிரவேசம் செய்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
எழுத்தாளர் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இதன் புரோமோஷன் நிகழ்ச்சிகளும் துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக ஆடுஜீவிதம் படத்திற்கான வெப்சைட்டை தொடங்கியுள்ளனர். இதன் துவக்க விழா நிகழ்வின் கலந்து கொண்டு இந்த வெப்சைட்டை துவங்கி வைத்தார் ஏ.ஆர் ரஹ்மான்.
அப்போது அவர் பேசும்போது, “மலையாளத்தில் யோதா படத்திற்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மீண்டும் திரும்பி உள்ளேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடித்த மலையான் குஞ்சு என்கிற படத்திற்கு இசையமைத்து இருந்தேன். ஆனாலும், ஒரு இசையமைப்பாளருக்கான படம் என்றால் அது ஆடு ஜீவிதம் படம் தான். அந்த அளவிற்கு படம் முழுவதுமே இசைக்கு வேலை வைக்கும் விதமாக உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகம்” என்று கூறியுள்ளார்.