‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ஷெரின் காஞ்ச்வாலா. மாடலிங் துறையில் நுழைந்து, விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமா நடிகை ஆனார். சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் பிறகு சிபிராஜூடன் வால்டர், சந்தானத்துடன் டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷெரின் காஞ்ச்வாலாவிற்கு அசார்முன் என்ற தொழிலதிபருடன் சத்தமின்றி கடந்த 5ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை அவர் இப்போதுதான் தெரியப்படுத்தி உள்ளார். நிச்சயதார்த்த படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர் “என்றென்றும் என்னவன்” எனக் கூறியுள்ளார்.
திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை, விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் ஷெரின் காஞ்ச்வாலா.