பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
டில்லியை சேர்ந்தவர் நடிகை தேவயானி ஷர்மா. ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். 2021ம் ஆண்டு , 'ரொமான்டிக்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் செகண்ட் ஹீரோயினாக ஆனார். தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் “சிம்புவுடன் நடித்தே தீருவேன். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்து பரபரப்பு கிளப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நான் நடித்தாலும் எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம்.
வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதுதான். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும்” என்கிறார்.