அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
டில்லியை சேர்ந்தவர் நடிகை தேவயானி ஷர்மா. ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். 2021ம் ஆண்டு , 'ரொமான்டிக்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் செகண்ட் ஹீரோயினாக ஆனார். தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் “சிம்புவுடன் நடித்தே தீருவேன். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்து பரபரப்பு கிளப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நான் நடித்தாலும் எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம்.
வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதுதான். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும்” என்கிறார்.