Advertisement

சிறப்புச்செய்திகள்

நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2015ல் தேங்காத தண்ணீர் இந்த மழையில் தேங்கியது ஏன்? : நடிகை கீர்த்தி பாண்டியன் காட்டம்

07 டிச, 2023 - 14:20 IST
எழுத்தின் அளவு:
Why-did-the-water-that-did-not-stagnate-in-2015-stagnate-in-this-rain?-:-Actress-Keerthy-Pandian-Kattam

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியதில் ஏற்பட்ட மழையின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. பெரும்பாலும் சென்னையில் வசிப்பவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் சிக்கி அவதிப்பட்டனர். சாதாரண ஜனங்கள் மட்டுமல்ல விஷ்ணு விஷால், நமீதா, ஆமிர்கான், போன்ற பிரபலங்கள் கூட மழைநீர் சூழப்பட்டதால் தங்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியன், சென்னையில் மிக மையப் பகுதியான டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தான் வசிக்கும் தெருவில் சூழப்பட்ட சாக்கடை நீரால் தானும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இரண்டு நாட்களாக தவித்தது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டமாக ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “இந்த பகுதியில் எப்போதுமே மழை நீர் தேங்காது. குறிப்பாக 2015ல் பெய்த மழைக்கு கூட இங்கே நீர் தேங்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் காரணமாக இந்த முறை மழை நீர் தேங்கியதுடன் சாக்கடை நீரும் சேர்ந்து கொண்டு தரைத்தளத்தில் வசிப்பவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எங்களை காப்பாற்றி அழைத்துச் செல்லுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜுனியர் நடிகை தற்கொலை : 'புஷ்பா நடிகர் கைதுஜுனியர் நடிகை தற்கொலை : 'புஷ்பா ... அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in