நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து ஆபாசமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்திலும் அது தொடர்பாக புகார் அளித்தார். அதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேசமயம் மணிப்பூரில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட போது நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என்று சோசியல் மீடியாவில் குஷ்புவை நோக்கி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி, கொச்சையான வார்த்தை பிரயோகம் செய்தார்கள். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக, உங்களைப் போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது. மணிப்பூர் விவாகரத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கவனித்து பாருங்கள் என்று பதிவிட்டிருந்தார் குஷ்பு.
அந்த பதிவில் அவர் சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. பலரும் குஷ்புவை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தி உள்ளார்கள்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த எதிர்ப்புகளை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. நான் கிண்டலுடன் பதிவிட்ட பதிவு அது. அதோடு சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் நேசிப்பவர் என்று அர்த்தம். நான் அன்பை பகிர்ந்து கொள்வதற்காக கிண்டலாக அந்த வார்த்தையை பதிவிட்டு இருந்தேன். நான் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன் நிற்க கூடியவள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் குஷ்பு.