Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு

24 செப், 2023 - 05:22 IST
எழுத்தின் அளவு:
Chiyaan-Vikram's-'Suriyaputra-Mahavir-Karna'-to-start-rolling-soon


மலையாளத்தில் கடந்த 2015ல் பிரித்விராஜை வைத்து 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.எஸ்.விமல். அந்தப் படத்தை தொடர்ந்து, வரலாற்று கதாபாத்திரமான மகாபாரத கர்ணனை மையமாக வைத்து பிரித்விராஜ் ஹீரோவாக நடிக்க ‛மகாவீர் கர்ணா' என்கிற படத்தை ஆரம்பித்தார். சில காரணங்களால் பிரித்விராஜ், அந்த படத்திலிருந்து விலகிக் கொள்ளவே, அதைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் மீண்டும் அந்த கதையை இந்தி உட்பட மும்மொழிகளில் பிரமாண்டமாக படமாக்கும் வேலைகளில் இறங்கினார் ஆர்.எஸ்.விமல். நடிகர் சுரேஷ் கோபியும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்தார்.

சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது என சொல்லப்பட்டது. 2019ல் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் விக்ரமும் சில நாட்கள் கலந்து கொண்டு நடித்தார்; இந்த படம் குறித்து சிலாகித்தும் பேசி வந்தார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த படம் குறித்து எந்த தகவலும் இல்லை. சொல்லப்போனால் இந்த படம் கைவிடப்பட்டதாகவே சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஆர்.எஸ் விமல் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கர்ணனாக நடிக்கும் விக்ரமின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‛சூரிய புத்திரன் கர்ணன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது' என்கிற தகவலை அப்டேட் செய்துள்ளார். முதல் படத்தை வெற்றி படமாக கொடுத்தாலும் தனது இரண்டாவது படத்தை துவக்க கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இயக்குனர் ஆர்.எஸ்.விமல் போராடி வருகிறார் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த ... 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? 'சந்திரமுகி 3' நடந்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)