நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
மலையாளத்தில் கடந்த 2015ல் பிரித்விராஜை வைத்து 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.எஸ்.விமல். அந்தப் படத்தை தொடர்ந்து, வரலாற்று கதாபாத்திரமான மகாபாரத கர்ணனை மையமாக வைத்து பிரித்விராஜ் ஹீரோவாக நடிக்க ‛மகாவீர் கர்ணா' என்கிற படத்தை ஆரம்பித்தார். சில காரணங்களால் பிரித்விராஜ், அந்த படத்திலிருந்து விலகிக் கொள்ளவே, அதைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் மீண்டும் அந்த கதையை இந்தி உட்பட மும்மொழிகளில் பிரமாண்டமாக படமாக்கும் வேலைகளில் இறங்கினார் ஆர்.எஸ்.விமல். நடிகர் சுரேஷ் கோபியும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்தார்.
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது என சொல்லப்பட்டது. 2019ல் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் விக்ரமும் சில நாட்கள் கலந்து கொண்டு நடித்தார்; இந்த படம் குறித்து சிலாகித்தும் பேசி வந்தார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த படம் குறித்து எந்த தகவலும் இல்லை. சொல்லப்போனால் இந்த படம் கைவிடப்பட்டதாகவே சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஆர்.எஸ் விமல் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கர்ணனாக நடிக்கும் விக்ரமின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‛சூரிய புத்திரன் கர்ணன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது' என்கிற தகவலை அப்டேட் செய்துள்ளார். முதல் படத்தை வெற்றி படமாக கொடுத்தாலும் தனது இரண்டாவது படத்தை துவக்க கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இயக்குனர் ஆர்.எஸ்.விமல் போராடி வருகிறார் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி தான்.