டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா: வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா | அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ரசிகர்களின் 'உருட்டு' | 'சரோஜா' படத்தில் தவறு… இப்போது கண்டுபிடித்த ரசிகர் | கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி | மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம் |

ராஞ்சி : ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு இமயமலை சென்றார். பெங்களூருவில் இருந்து நண்பர்களுடன் இமயமலை பயணத்தை துவக்கிய அவர், முதலில் ரிஷிகேஷ், பத்ரிநாத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இமயமலை ஒட்டியள்ள ஆன்மிக தலங்களுக்கு நடைபயணமாக சென்ற அவர், பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார்.

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு நேற்று(ஆக.,16) ரஜினி சென்றார். ராஜ்பவனில், அம்மாநில கவர்னரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்த , எனது அன்பு நண்பரும், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த மனிதருமான ரஜினிகாந்தை ராஜ் பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஜார்க்கண்டின் மாபெரும் மண்ணிற்கு வந்த அவரை வரவேற்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.




